வெள்ளப் பெருக்கினால் 10 இலட்சம் பேர் இடம்பெயர்வு!

சீன தலைநகர் பெய்ஜிங் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இது வரையில் 10 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் குறித்த வெள்ளப் பெருக்கில் சிக்குண்டு 40 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை அந்த நாட்டு அரசாங்கம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply