கந்தானை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

கந்தானை, பியோ மாவத்தையில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்  கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமில் உள்ள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் நேற்று கந்தானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் வசம் இருந்த 2 கிராம் 350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

26 வயதான குறித்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக கந்தானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கந்தானை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவியதாகக் கூறப்படும், தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள “சுட்டி மல்லி” என்றழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் ரசிக சாமோத் என்ற  குற்றவாளியின் நெருங்கிய சகா என நம்பப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply