கேகாலையில் பாடசாலை மற்றும் முன்பள்ளி சிறுவர்களை சந்தித்த சச்சின்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று பிற்பகல் கேகாலை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மற்றும் முன்பள்ளி சிறுவர்களை சந்தித்துள்ளார் .

சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்கவின் விசேட அழைப்பின் பேரில் அவர் இந்த கண்காணிப்பு பயணத்தில் இணைந்துள்ளார்.

யுனிசெஃப் தெற்காசிய பிராந்திய நல்லெண்ணத் தூதுவரான சச்சின் டெண்டுல்கரின் மேற்பார்வையின் கீழ் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான யுனிசெப்பின் குழந்தை ஊட்டச்சத்து திட்டத்தை நடைமுறைப்படுத்தவே அவர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply