இரண்டு மோட்டார் சைக்கிள்கள் லொறியுடன் மோதி விபத்து!

பண்டாரகம, கம்புருகுடா பகுதியில் லொறி ஒன்றுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தின் போது படுகாயமடைந்த ஒருவர் மில்லனிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் எனவும் மற்றொருவர் பாடசாலை ஒன்றின் ஆசிரியர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் தங்காலை கெகுலோகமுவ மோதர பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

பண்டாரகமவிலிருந்து கெஸ்பேவ நோக்கி பயணித்த குறித்த லொறி எதிரே பயணித்த லொறியை முந்தி செல்ல முற்பட்டபோது அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் ஆசிரியர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply