தொழிற்சங்க பிரச்சனைகள் குறித்து விவாதித்த பிரதமர்!

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று அலரிமாளிகையில் தொழிற்சங்க பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், முதலாளிகளின் பிரச்சினைகள் மற்றும் உத்தேச வரைவுச் சட்டமூலம் குறித்து இந்தக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பிரதமரின் அலுவலகத்தின்படி, தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெளிவற்ற சில ஷரத்துக்களைத் திருத்துவதற்குத் தங்கள் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்து, மேலும் கலந்துரையாடல்களை நடத்த ஒப்புக்கொண்டனர்.

இந்த சந்திப்பில் தொழிலாளர் ஆணையாளர் நாயகம், முதலாளிமார் சம்மேளனம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply