சிறைச்சாலை அதிகாரியைத் தாக்கிய மூவர் கைது!

அண்மையில் காலி சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மூன்று பேரை இலங்கை கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதன்படி,நேற்று கைது செய்யப்பட்டவர்களைத் தொடர்ந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 19 மற்றும் 30 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் வெலிகம, மிதிகம மற்றும் அஹங்கம ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டு இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி காலி சிறைச்சாலையின் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது 10 பேர் கொண்ட குழுவொன்று அவர் மீது தாக்குதல் நடத்தியது.

முகமூடி அணிந்த தாக்குதல்காரர்கள் வெலிகம ஹால்ட்டில் இருந்து பஸ்ஸில் துப்பாக்கிகளுடன் ஏறி 43 வயது சிறை அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply