கடைக்கு சென்ற சிறுமியை காணவில்லை! பொலிஸில் முறைப்பாடு!

கைத்தொலைப்பேசிக்கான மீள் நிரப்பு  அட்டையை கொள்வனவு செய்வதற்காக வீட்டுக்கு அருகிலுள்ள கடையொன்றுக்கு சென்ற 15 வயது சிறுமியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடத்திச் சென்றதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

57 வயதுடைய  சிறுமியின் தந்தையே இவ்வாறு  முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 4 மணியளவில் தொலைபேசி மீளநிரப்பு அட்டை வாங்குவதற்காக கடைக்குச் சென்ற சிறுமி திரும்பி வர தாமதமானதால் குறித்த சிறுமியின் தந்தை  பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply