நாட்டில் அதிகரித்துவரும் துப்பாக்கிசூடு! மேலும் ஒருவர் பலி!

வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹுவ பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர் கைத்துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த  நபர் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே குறித்த துப்பாக்கிசூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply