இலங்கையில் நடைபெறவுள்ள 37 வது ஆசிய பசிபிக் மாநாடு!

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைச்சின் 37 வது ஆசிய பசுபிக் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் குறித்த மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில், அரசாங்கத்தின் ஆதரவை பெறுவதற்கு நேற்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டது.

குறித்த யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply