மகளை கேலிசெய்த நபரை கொலை செய்த தந்தை!

தனது மகளை கேலி செய்த இளைஞனை ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை, கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கொழும்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் ,நவகம்புர பகுதியைச் சேர்ந்த21 பரமானந்தன் தினேசன் என்பது தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞனை கொலை செய்த தந்தை பொலிஸில் சரணடைந்த பின்னர் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு அடைக்கலம் கொடுத்த நண்பரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த இளைஞனை கொல்லப் பயன்படுத்திய கூரிய ஆயுதம் மற்றும் அவர் அணிந்திருந்த ஆடைகள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply