100 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை!

தீவு முழுவதும் செயலில் உள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக, இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை நாளை அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் வெளியிட்ட ஆம்பர் ஆலோசனையில் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply