அஸ்வெசும பயனாளிகளுக்கான இரண்டாம் கட்ட பணிகள் இன்று!

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 2 இலட்சத்து 57 ஆயிரத்து 170  பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

இன்றைய தினம் அஸ்வெசும பயனாளிகளுக்கான பணம் வங்கிகளில் வைப்பு செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஆயிரத்து 550 மில்லியன் ரூபாய் இரண்டாம் கட்டமாக வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் கட்டத்தில் மாத்திரம் 6 இலட்சத்து 89 ஆயிரத்து 803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மொத்தமாக 4 ஆயிரத்து 395 பில்லியன் ரூபாய் வைப்பிலிடப்பட்டிருந்தது.

எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் குறித்த ஒரு நாளில் இந்தக் கொடுப்பனவை வழங்கத் திட்டமிடபட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply