இந்தியா-பாகிஸ்தான்: ஒத்திவைக்கப்பட்ட ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி – இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பம்..!

ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை, நேற்று கொழும்பில் இருக்கும் பிரேமதாசா மைதானத்தில் எதிர்கொண்டது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி பேட்டிங் செய்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் அருமையான தொடக்கத்தை கொடுத்து ரோகித் சர்மா 49 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். இதேபோல் சுப்மான் கில் 58 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் அவர் 10 பவுண்டரிகள் அடங்கும்.

24.1 ஓவர் ஆடியிருக்கும் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் என்ற நிலையில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களத்தில் இருக்க திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி தடைப்பட்டு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இப்போட்டிக்கு ரிசர்வ் டே அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில், இந்தியா – பாக் ஆட்டம் இன்று மீண்டும் 24.1 ஓவரிலிருந்து, இன்று மாலை 3 மணிக்கு தடைபட்ட போட்டிகள் தொடங்கும் எனவும் நேற்று போல் இன்றும் மழை பெய்து போட்டி தடைபட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply