அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு 75 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்த யாழ்ப்பாண ஆசிரியர்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காகப் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கான விளம்பரங்கள் மூலமாக கொழும்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுடன் அறிமுகமாகி, கட்டம் கட்டங்களாக 75 லட்சம் ரூபாவை அவர் வங்கியில் வைப்பிலிட்டுள்ளார்.
வங்கியில் பணம் வைப்பிலிட்டு நீண்ட காலமாக ஏமாற்றமடைந்ததால், அவர் யாழ்.மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த யாழ்.மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணறோயனின் கீழ் இயங்கும் சிசிர குழுவினர் கொழும்பினைச் சேர்ந்த சந்தேகநபரைக் கைது செய்து, நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது சந்தேநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தச் சந்தேகநபரால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளைச் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply