போலி நாணயத்தாளைக் கொடுத்த தருமபுரம் வர்த்தகர் கைதானார்!

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் பொருள் கொள்வனவு செய்யும்போது வழங்கப்பட்ட பணத்தில் 5000 ரூபாய் போலி நாணயத்தாள் ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்துப் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, வர்த்தக நிலைய உரிமையாளர் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தருமபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் போலி நாணயத்தாள்கள் பயன்பாட்டில் இருப்பதாக தமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் எனவே வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் பணக் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply