சி.வி.கே.சிவஞானத்தின் கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக எந்த ஒரு மதுபானசாலையும் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினால் தீர்மானம் எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்த போதிலும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளையில் புதிதாக மதுபானசாலை ஒன்று அமைப்பதற்கு எடுத்த முயற்சிக்கு பொதுமக்களின் எதிர்ப்பு காணப்பட்டமை தொடர்பில், இன்று இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட போதே வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் மேற்படி கோரிக்கையினை முன்வைத்தார்.

யாழ்ப்பாணத்தில் மதுபானசாலைகள் போதுமான அளவு உள்ளதாகவும் இனி யாழ் மாவட்டத்திற்கு மதுபானசாலைகள் எதுவும் புதிதாக தேவையில்லை எனவும் புதிய மதுபானசாலைகளுக்குரிய அனுமதியினை வழங்கக் கூடாது என தீர்மானிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த விடயத்தில் தலையிட்ட வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ் மாவட்டத்திற்கு எத்தனை மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்க முடியும் என்ற ஒரு நியதி உள்ளது.

அதனை பரிசீலித்து தான் தீர்மானிக்க முடியும் என தெரிவித்தாதடு, கள்ளுத் தவறணைகளையும் சேர்த்து யாழ்ப்பாண மாவட்டத்தில் 146 மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்க முடியும் எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply