உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலையில் ஆரம்பாமாகியுள்ள கலாசாரத் திருவிழா!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் கைப்பணிப் பொருள் சந்தை, கலாசாரத் திருவிழா ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்த நிகழ்வு நேற்றைய தினம் ஆரம்பமாகி தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு நடைபெறவுள்ளது.

செப்டெம்பர் 27,28 மற்றும் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

குறித்த கலாசார திருவிழா மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

இந்த நிகழ்வு, வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்கழம் மற்றும் வட மாகாண சுற்றுலாத் துறை என்பவற்றின் ஏற்பாட்டில் நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply