மீட்டியாகொட பகுதியில் பரபரப்பு!

அம்பலாங்கொட, மீட்டியாகொட பகுதியில்  இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அம்பலாங்கொடை – மீட்டியாகொட வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த  ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர் அம்பலாங்கொடை பனியனையில் வசிக்கும் 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

அவர் தற்போது பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறமை குறிப்படத்தக்கது.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், தலைமறைவாக உள்ள இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகளை மீட்டியாகொட பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply