சட்டவிரோதமாக தங்கம் கடத்திய பெண் கைது!

இந்தியாவில் இருந்து 1.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வந்த இலங்கை வர்த்தகப் பெண் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் இன்று அதிகாலை  கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் அடிக்கடி விமானங்களில் பயணித்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இன்று  அதிகாலை சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பெண், அங்கு அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 587 கிராம் 316 மில்லிகிராம் எடையுள்ள தங்க  நகைகள் அவர் கொண்டு வந்த பயணப்பொதியில்  மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

கைது செய்யப்பட்டபெண்ணும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகளும்  மேலதிக விசாரணைகளுக்காக  விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply