இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு!

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும், தனியார் பாடசாலைகளின் 2023ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணையின் கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளன.

கல்வி அமைச்சு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 31ஆம் திகதி வரையில், விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இந்தநிலையில், அந்த பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply