ரொஷானின் தீர்மானத்தை இடைநிறுத்தியது நீதிமன்றம்

அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேபோல் விளையாட்டு அமைச்சர் நியமித்த குழு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பிரஸ்தாபித்ததுடன், கிரிக்கெட் விளையாட்டிலிருந்து அரசியல் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இடைக்கால கிரிக்கெட் நிர்வாக குழுவின் தலைவராக நேற்று நியமிக்கப்பட்ட அர்ஜுன ரணதுங்க, நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் பின்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து வௌியேறியுள்ளார். (அ)

You May Also Like

About the Author: digital

Leave a Reply