பாதகமான வானிலை – பல வீதிப் போக்குவரத்துகள் தடை!

நிலவும் பாதகமான காலநிலையால் ஏற்படும் நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதிலும் உள்ள பல பிரதான வீதிகள் தடைப்பட்டுள்ளன.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவலின்படி, பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பலாங்கொடை சீலகம பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட மண்சரிவினால் வாகனப் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

இதேவேளை, பசறை – நமுனுகுள வீதியில் எல்ல நோக்கிச் செல்லும் கடும் மழையினால் 16ஆம் 20ஆம் மைல் தூண்களுக்கு இடைப்பட்ட பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் அவ்வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

மேலும், கட்டுகஸ்தோட்டை – கன்னோறுவ பிரதான வீதியில் வாரதென்ன பிரதேசத்தில் பாரிய பாறை ஒன்று வீதியில் வீழ்ந்துள்ளதால் வாகன போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply