உணவு விலையில் அதிரடி மாற்றம்!

அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் உணவு விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், மீண்டும் ஒருமுறை உணவகங்களில் சிற்றுண்டி உள்ளிட்ட இதர உணவுகளின் விலையை உயர்த்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக முட்டை, இறைச்சி, மீன், சீனி மற்றும் கீரி சம்பா அரிசி போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக உணவுகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், உணவு விலைகள் எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply