குருநாகலில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி!

குருநாகல், மாவத்தகமவில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

மோதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply