பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு புதிய நியமனம் !

பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, பசறை மற்றும் லுனுகல பிரதேசங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளையும் கண்காணிக்கும் பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் கவனம் செலுத்தி மலைநாட்டுத் தமிழர்களின் விரிவான ஒருங்கிணைப்பை மேற்பார்வையிடுவதை மையமாகக் கொண்டு அந்தப் பாத்திரம் அமையும்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply