யாழில் அமைக்கப்படவுள்ள புதிய மின் உற்பத்தி நிலையங்கள்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நயினாதீவு ,நெடுந்தீவு மற்றும் அனலைத்தீவு ஆகிய 3 இடங்களை உள்ளடக்கி 3 புதிய மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த மின் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இந்த புதிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவும் ஒப்பந்தம் இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை Solar Spotless Energy Solutions எனும் தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply