போதைப்பொருளுடன் 24 மணி நேரத்தில் 2,000 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2008 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்படடவர்களில், 185 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதுடன், 33 சந்தேக நபர்களுக்கு எதிராக சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 209 பேர் புனர்வாழ்விற்காக உத்தரவிடப்பட்டுள்ளதுடன், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் சிறப்புப் பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 228 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த நடவடிக்கையில் 2 கிலோ 400 கிராம் ஹெரோயின், 1 கிலோ 200 கிராம் ஐஸ், 12 கிலோ 200 கிராம் கஞ்சா, 5 கிலோ 200 கிராம் மாவா மற்றும் 17,054 மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply