ரீயூனியன் தீவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்!

கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்கு சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 14 இலங்கை பிரஜைகளை பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

UU 0050 என்ற விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்ட குழுவில், IMUL-A- 0813- KLT என்ற பல நாள் மீன்பிடி இழுவை படகில் கடந்த 7ஆம் திகதி அன்று இடம்பெயர்ந்த 7 பேரும் , IMUL-A- 0813-KLT என்ற பல நாள் மீன்பிடி இழுவை படகில் இடம்பெயர்ந்த 2பேரும் மேலும் 2018, மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் IMUL-A- 0014 CBO என்ற பல நாள் மீன்பிடி இழுவை படகில் இடம்பெயர்ந்த 3 பேரும், 2019இல் இந்தோனேசியாவிலிருந்து குடிபெயர்ந்த 2 நபர்களும் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த நபர்கள் பேருவளை, சிலாபம் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும் 21 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸார் இணைந்து இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ரீயூனியன் தீவிற்கு மக்கள் சட்டவிரோதமாக நுழைவதை பிரான்ஸ் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அத்தகைய நபர்கள் அச்சத்தின் பேரில் உடனடியாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கடல் வழியாக மனித கடத்தல்காரர்களால் திட்டமிடப்பட்டு சட்டவிரோத குடியேற்றங்களில் ஈடுபடுவதையோ அல்லது அதற்கு ஆதரவளிப்பதையோ தவிர்க்குமாறு இலங்கை கடற்படை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply