யுக்திய நடவடிக்கையில் மேலும் 1,400 பேர் கைது!

நடந்துகொண்டிருக்கும் யுக்திய நடவடிக்கையின் போது, ​​போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மேலும் 1,400 சந்தேக நபர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

அந்தவகையில், இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் 1,467 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, மேலதிக விசாரணைகளுக்காக 56 சந்தேக நபர்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 51 பேர் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 460 கிராம் ஹெரோயின், 653 கிராம் ஐஸ், 3.63 கிலோ கஞ்சா, 562 போதை மாத்திரைகள் மற்றும் 103,793 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டன.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply