முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோத மதுபானஉற்பத்தி நிலையங்கள் சுற்றிவளைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் இயங்கி வந்த இரண்டு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள், புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டது.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், 32 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை,கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 14 பரல்கள், 810 லீட்டர் கோடா மற்றும் 60 லீட்டர் கசிப்பினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலேயே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply