2023 உயர்தரப் பரீட்சையை இலக்காகக் கொண்ட கல்வி வகுப்புகளுக்கு இன்று முதல் தடை!

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தயாராக்கும் வகையில் நடத்தப்படும் அனைத்து பயிற்சி வகுப்புகளுக்கும் நேற்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

அதன்படி, பரீட்சையை இலக்காகக் கொண்டு கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் மற்றும் பிற தொடர்புடைய நடவடிக்கைகள் நடத்துவது பரீட்சை முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளது.

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பமாகி ஜனவரி 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், அனைத்து அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் 2023 ஆம் கல்வியாண்டிற்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி 2 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply