பெண்ணை கொன்ற நபர் – விமான நிலையத்தில் கைது!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் பெண்ணொருவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் ஊழியரான 41 வயதுடைய குறித்த நபர் நேற்று மாலை கஹதுடுவ பிரதேசத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் 45 வயதுடைய நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

பிலியந்தலை, மடபாத பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருமணத்துக்குப் பின் வேறு ஒருவருடன் இருந்த தொடர்பு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல வருடங்கள் வெளிநாட்டில் தங்கியிருந்த பின்னர் அண்மையில் தான் நாடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply