நாணய சுழற்சியில் சிம்பாப்பே வெற்றி!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்துள்ளது.

போட்டியின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இதேவேளை, ஆர்.பிரேமதாச மைதானத்தின் சி மற்றும் டி வலயங்களில் இன்று நடைபெறும் போட்டியை பார்வையாளர்கள் இலவசமாக பார்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Rilak Shana

Leave a Reply