யாழில் கசிப்புடன் நான்கு பேர் கைது!

யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலில் கோப்பாய் பொலிஸ் பிரிவில் திருநெல்வேலி சந்தையில் செருப்பு தைப்பவர் கசிப்பு வியாபாரத்தில் மறைமுகமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்னொரு இடத்தில் தொகையாக வாங்கி வந்து தினமும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார் என முதல் கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் உதவியுடன் விற்பனை செய்யும் இடத்தை சுற்றிவளைத்த பொழுது கோப்பாய் மத்தி சூசியப்பர் கோவிலடியில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்ப்பட்டுள்ளார்கள்.

காது செய்யப்படடவர்கள் வயது 46,27,45, நிரம்பியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்களிடம் இருந்து 19லீற்றர் கசிப்பு மீட்கபட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதீக விசாரனைக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply