நாடு திரும்பினார் பிரித்தானிய இளவரசி!

பிரித்தானியாவின் இளவரசி ஆன் இலங்கைக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டன், நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்.

இளவரசி ஆன் மற்றும் தூதுக்குழுவினர் நாட்டை விட்டு வெளியேறியதாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று அதிகாலை 02.25 மணியளவில் இளவரசி ஆன் மற்றும் அவரது குழுவினர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-505 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டனர்.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply