ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்!

மருத்துவர்களுக்கான இடையூறு, இருப்பு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவை அதிகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுகாதாரத் துறை ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் நாளை காலை 06.30 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.

தமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் எந்தவொரு கலந்துரையாடலையும் வழங்கவில்லை என சித்த மருத்துவ சேவைகள் முன்னணியின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

எனவே, நாடளாவிய ரீதியில் நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தில் அனைத்து மருத்துவ சேவைகள், வைத்தியசாலை செயலாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், சுகாதார நிர்வாக உதவியாளர்கள், சிற்றூழியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் 75 தொழிற்சங்கங்கள் உட்பட சுமார் 100,000 சுகாதார ஊழியர்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை மருத்துவமனை சேவையை முற்றிலும் சீர்குலைக்கும். வைத்தியர்களால் மாத்திரம் மருத்துவ சேவைகளை பேண முடியாது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என உபுல் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை, சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை ஒடுக்க இராணுவப் படைகளை பயன்படுத்தினால், தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் முன்னெடுப்போம் என சுகாதார நிபுணர்கள் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply