யுக்திய நடவடிக்கையில் மேலும் 878 சந்தேக நபர்கள் கைது!

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் 878 சந்தேக நபர்கள் நாட்டின் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 649 சந்தேக நபர்களும், தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முன்னதாக இருந்த 229 பேரும் அடங்குவர்.

போதைப்பொருள் சந்தேக நபர்களில் 6 பேருக்கு எதிராக தடுப்பு உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதுடன், மேலும் 4 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 130 கிராம் ஹெரோயின், 134 கிராம் ஐஸ், 1.2 கிலோ கஞ்சா மற்றும் 2,211 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply