76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 750க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!

இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 700க்கும் மேற்பட்ட கைதிகள் நாளையதினம் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 25 பெண் கைதிகள் உட்பட மொத்தம் 754 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

அரசியலமைப்பின் 34வது சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த விசேட மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் ஆணையாளரும், பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்கவும் விளக்கமளித்தனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply