பல வருடங்களின் பின்னர் இலங்கைக்கு ஏற்பட்ட நிலை – ஜனாதிபதி தெரிவிப்பு!

43 ஆண்டுகளின் பின்னர் முதல்தடவையாக இலங்கை உபரி நிலையை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதியின் தலைமையில் இன்று ஆரம்பமானது.

இதன்போது அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடனத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உபரி நிலையை அடைய முடிந்தது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply