தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!

இலங்கை தேர்தல் ஆணையத்தின் முடிவின்படி, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டம் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்த  தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இன்று  மற்றும் மார்ச் 6 ஆம் திகதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ. எல். ரத்நாயக்க  குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, தேர்தலுக்கான பணம் செலவிடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

எவ்வாறாயினும், குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒரு தேர்தல் கூட நடத்தப்படாத காரணத்தினால், குறித்த சட்டத்தின் விதிகள் தொடர்பில் அரசியல்வாதிகளுக்கு உரிய புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் இது இடம்பெறவுள்ளது.

அந்தவகையில், ரஞ்சித் மத்துமபண்டார, சிசிர ஜயக்கொடி, உவிந்து விஜேவீர மற்றும் அவர்களது சம்பந்தப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றைய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply