பிரேமரத்னவின் ராஜினாமாவை தொடர்ந்து, காலியாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

அனுராதபுரம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய உத்திக பிரேமரத்னவின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்டுள்ள பாராளுமன்ற வெற்றிடம் குறித்து பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் பிரேமரத்ன தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் சமிந்த குலரத்னவிடம் பெப்ரவரி 27 அன்று கையளித்தார்.

இதேவேளை, குறித்த பாராளுமன்ற வெற்றிடத்தை எஸ்.சி.முத்துகுமரன நிரப்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply