கிராம உத்தியோகத்தர்  நேர்காணலுக்கான திகதிகள் அறிவிப்பு!

வெற்றிடமாக உள்ள கிராம உத்தியோகத்தர்  பதவிகளுக்கான விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.

அதன்படி, 2024 மார்ச் 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் அதற்கான நேர்காணல் நடத்தப்படும்.

கடந்த 2023 டிசம்பர் மாதம் நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மொத்தம் 4,232 பேர் நேர்காணலை எதிர்கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

எவ்வாறாயினும், நேர்முகத் தேர்வைத் தொடர்ந்து வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, நேர்காணல் முடிவுகளின் அடிப்படையில் மொத்தம் 2,002 நபர்கள் கிராம உத்தியோகத்தர் சேவையின் தரம் III க்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply