நாடு திரும்பினார் பசில்!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து இன்று  காலை நாடு திரும்பினார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு, கட்சியின் ஸ்தாபகரை அன்புடன் வரவேற்பதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு  சென்றிருந்தனர்.

தனது வருகையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கவில்லை என தெரிவித்தார்.

நாடாளுமன்றத்துக்குத் திரும்பும் திட்டம் எதுவும் தமக்கு இல்லை என்று கூறிய ராஜபக்ச, தேர்தல் ஏற்பாடுகளுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தொடர்ந்து வழிகாட்டுவதாகக் கூறினார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply