ரயில்வே ஊழியர்களின் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு ரத்து!

இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த காலவரையற்ற பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை இலங்கை ரயில்வே ஊழியர்கள் தற்காலிகமாக மீளப்பெற்றுள்ளதாக புகையிரத இயந்திர இயக்க பொறியாளர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத இயந்திர இயக்க பொறியாளர்கள், ரயில்வே காவலர்கள், ரயில்வே மேற்பார்வை மேலாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தன.

அவர்களின் சம்பளத்தைக் குறைக்கும் அமைச்சரவைப் பத்திரத்தை மாற்றியமைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் முகமாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது.

எவ்வாறாயினும், இன்று மாலை அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply