போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கொழும்பு – புஞ்சி பொரளை பகுதியில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காகப் பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இன்று பிற்பகல் முதல் புஞ்சி பொரளை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply