முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் உலாவரும் முதலைகள்!

முல்லைத்தீவில் உள்ள நந்திக்கடல் மஞ்சள் பாலத்தில் உள்ள நீர் நிலைகளில் ஏராளமாக முதலைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், பாலத்தில் உள்ள நீரில் மீன்பிடியில் ஈடுபடும் மக்கள் முதலைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நண்பகல் பொழுதில் பாலத்தின் நீரிடையில் உள்ள மேட்டு நிலத்தில் வெயிலில் காய்வதற்காக முதலைகள் வெளியில் வருவதை அவதானிக்க முடிவதாக முன்னரே சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply