ஜனாதிபதியுடன் சென்ற பிள்ளையான்! இருவருக்கும் இடையில் தனிப்பட்ட கலந்துரையாடல்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், பிள்ளையான் உலங்கு வானூர்தியில் கொழும்புக்கு சென்றதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்த நிலையில், பாசிக்குடா விடுதியில் இருந்து, ரணிலுடன், பிள்ளையானும் உலங்கு வானூர்தியில் கொழும்புக்கு பயணம் செய்துள்ளார். இதன்போது இருவருக்கும் இடையில் தனிப்பட்ட உரையாடகள் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் , அவை தொடர்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உலங்குவானூர்தியில் கொழும்பிற்கு பயணித்தார் என பதிவிடப்பட்டு வெளியாகிய ஒரு புகைப்படம் தற்போதைய அரசியலில் பல அர்த்தங்களை கோடிட்டுக் காட்டியுள்ளமையும் இணையத்தில் வைரலாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply