மருந்தாளர்கள் பணிப்புறக்கணிப்பால் கிளிநொச்சி வைத்தியசாலையின் செயற்பாடுகள் பாதிப்பு!

வைத்தியசாலைகளின் மருந்தாளர்கள் மேற்கொண்டிருக்கின்ற பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் பாதிப்படைந்திருப்பதை காணமுடிந்தது.

பதவியுயர்வு, மற்றும் புதிய ஆளணியை நிரப்ப வலியுறுத்தியே குறித்த பணிப்புறக்கணிப்பில் அவர்கள் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் மாதாந்த சிகிச்சை நாள் என்பதால் சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள் மருந்துகளைப் பெறமுடியாது ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிந்தது.

மாதம் ஒருமுறையாவது இப்படியான பாணிப் பகிஷ்கரிப்பு இடம்பெறுவதனால் அப்பாவி நோயாளர்களாகிய தாங்களே பதிக்கப்படுவதாக அங்கு வந்திருந்தவர்கள் கவலை தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply