சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆளுந்தரப்பினரே முன்வைத்தனர்! மஹிந்தானந்த தெரிவிப்பு!

தற்போதைய சபாநாயகருக்கு எதிராக ஆளுந்தரப்பினரே நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய சபாநாயகர் கடந்தகாலங்களில் நாடாளுமன்றில் எதிர்த்தரப்பினரின் கருத்துக்களுக்கு செவிமடுக்கவில்லை என்பது அவர்களின் பாரிய குற்றச்சாட்டாக காணப்பட்டது.

நாடாளுமன்றில் அவர் நடுநிலையாக செயற்படவில்லை என கூறினார்கள். ஆனால் சபாநாயகருக்கு எதிராக ஆளுந்தரப்பினரே நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைத்திருக்க வேண்டும்.

ஏனென்றால் கடந்த காலங்களில் நாடாளுமன்ற அமர்வுகளில் எதிர்த்தரப்பு உறுப்பினர்களுக்கு அதிக கால அவகாசம் வழங்கியதுடன் எதிர்த்தரப்பினரின் கோரிக்கைகளை செவிமடுத்த சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவை தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply