ஊடகங்களுக்கு பயந்து தப்பியோடிய மைத்திரிபால சிறிசேன!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஐந்து மணித்தியால விசாரணையின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பின்வாயில் வழியாக வெளியேறியுள்ளதாக அருகிலிருந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்றிருந்த நிலையில் விசாரணையின் பின்னர் மைத்திரிபால வெளியேறியுள்ளார்.

இதன்படி, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று காலை 10.30 மணிக்கு வருகை தந்த மைத்திரிபால சிறிசேனவிடம் ஐந்து மணித்தியால விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (25) அங்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

விசாரணைகள் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தவிர்க்கும் வகையில் திணைக்களத்தின் பிரதான நுழைவாயில் இன்றி பிறிதொரு வாயில் வழியே வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply